அம்பிகையின் ஆதரவு போராட்ட களத்தில் பரபரப்பு; ஒருவர் கைது, பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி

சர்வதேச நீதி கோரி திருமதி அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் 16 ஆவது நாளை அடைந்துள்ள நிலையில் அவரது வீட்டினின் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பிகையின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவரை காப்பாற்று என்று கிளரர்ந்தெழுந்த தமிழர்களை அடக்குவதற்கு பெருமளவிலான பிரித்தானிய பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.